Thursday, September 29, 2011

ஒரே பணியாளர்களை இரு கட்ட தேர்தலிலும் பயன்படுத்த முடிவு

உள்ளாட்சித் தேர்தலில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, இரண்டு கட்ட தேர்தலிலும் ஒரே பணியாளர்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

உள்ளாட்சித் தேர்தல் அக்., 17, 19 ல் இரண்டு கட்டமாக நடக்கிறது. இதன் பணியில் ஊரக வளர்ச்சி, வருவாய், கல்வித்துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். உள்ளாட்சித்தேர்தலில் அதிக ஓட்டுச்சாவடிகள் உள்ளதால், போதுமான பணியாளர்கள் இல்லை. காலிப்பணியிடங்கள் காரணமாக பணியாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இதனால் அக்., 17 ல் நடக்கும் முதல் கட்ட தேர்தலில் பணிபுரியும் பணியாளர்களை கொண்டு, அக்., 19 ல் நடக்கும் இரண்டாம் கட்ட தேர்தலில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "உள்ளாட்சித் தேர்தலில் அதிகளவு ஓட்டுச்சாவடிகள் உள்ளன. கிராமங்களில் நான்கு ஓட்டு பதிவு செய்வதால் தாமதம் ஆகும். இதற்கு போதுமான அலுவலர்கள் தேவைப்படுவதால், முதல்கட்ட தேர்தலில் பணியாற்றியவர்களே இரண்டாம் கட்ட தேர்தலில் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது,'' என்றார். 

நன்றி


1 comment:

  1. Many employees use to influence the authority and removed their name from the list forwarded to the election authority. For example, in a school suppose 8 teachers are working, at least 3 of them influenced and had not included their name from the list forwarded. So they have not been alloted with the election duty. so only other people who are honest are being utilized for the 2 nd round also. The government is also not taking any action against them, even after I have sent an email regarding this to our district Collector. It is a shame.

    WITH REGARDS

    MANIVANNAN K
    CUDDALORE

    ReplyDelete